வேண்டாத பொருள் தேடி
விரும்ம்பி நீ ஓடு!...
உன்னை நாடாத அனைத்திலும்
பற்று நீ கொள்!
பொருளில்லா பொருள் பொருள்பேசி
புதிராய் நீ விளங்கு
புரியாத பொருளெல்லாம் புரிந்ததை
பொய்யாய் நீ புழுகு!
உன்னை ஞானி என
பிரரழைக்க இது போதும்!.
THE PAGE FOR WHO LOVE OTHERS
வரமாட்டாய்
எனத் தெரிந்தும் உனக்கு
நானளித்த திருமண பத்திரிகை.,
உன்
ஏளனமும்.,
அலட்சியமும்.,
உடைந்து நிற்க.,
வேண்டாமென்று மரம் உதிர்த்த மலர்
கூந்தலோன்றேரிய சந்தொஷமேனக்கு.,
உனக்குள் உறைந்த
மௌனம் சொன்னது
என் வெற்றியை!.
ஆலயமணியோசைக்கு
விழுந்து தொழுபவன் நான்!.
இன்றோ.,
உன் கொலுசின் மணியோசைக்கு
என் இதயம் தொழுகின்றது!
கடவுளும் - காதலும்
கண்ணுக்குத் தெரிவதில்லை.,
இரண்டுக்கும் உருவம் இல்லை.,
இரண்டையும் நம்புவோர்
ஆயிரமாயிரம்!
நான்
பாதயாத்திரை செல்லும்
புனித பாதை
உன் தெரு!
கடவுளும்,
பெற்றோரும் - பிறந்தோரும்
இருந்த மனதில்
இப்போது
"அவர்களும்" இருக்கின்றார்கள்!
நடுப்பகல் ஆனபோதும்
இருண்டு போனதாகவே தோன்றுகிறது
நீ வராத பொழுது!
எல்லோரும் இதைத்தான்
காதல் என்றார்கள்!
அதை மறுதலித்தேன்.,
இதுதான் என் "வாழ்க்கை " என்றேன்!