வெள்ளி, 22 மே, 2009

காதல்

காதலுக்கு முகவரி கொடுத்தவர்கள்

என்று சிலரை சொன்னார்கள்.,

ரோமியோ - ஜூலியட் .,

அம்பிகாபதி - அமராவதி.,

லைலா - மஜ்னு

அனார்கலி - சலீம்.,

ஷாஜகான் - மும்தாஜ்

என உதாரண ஜோடிகள் நீண்டுகிடக்க.


மெல்ல காதலை கேட்டேன்.,

"இவர்களின் முகவரியிலா
வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்?!"


நகைத்தது காதல்.,

"உலகத் தோற்றத்தின்

உயிர் நான்.,

ஒவ்வொரு உயிரின்

சுவாசம் நான்.,

மனிதனில் உருவாகவில்லை நான்

அணுக்களில் தொடங்கி கருவானேன்!

இவர்கள் எனக்கு முகவரியல்ல

என் முகவரியில் அவர்கள் வாழ்கிறார்கள்."


"எப்படி?!" என்றேன்.


"காதல் இல்லையேல்

இந்த காவியங்கள் இல்லையே!"



கருத்துகள் இல்லை: