புதன், 20 மே, 2009

MOZHI

* பேசிக்கொண்டிருந்தோம
மௌனங்களால்
உயிரால் பார்த்துக்கொண்டு.
* காதல் பாடல்கள்
ஒலித்துக்கொண்டிருந்தன

நம் மனங்களுக்குள்
* எண்ணிலடங்கா காதல் ஆண்டுகளை
வாழ்ந்துகொண்டிருந்தோம்
கடக்கும் நொடிகளால்.
* உதடு துடித்து
சில வார்த்த்தை தெறித்தன,
நீ தலையசைத்து
போகிறேன் என்றபோது
"எப்போது மீண்டும்?!"- என்று.
கண்களால் "நாளை" என்றாய்,
இதயத்தால் "போய் வா" என்றேன்.
* இரவின் மௌனத்தில்
இன்றிரவு மின்மினி
நம் காதலை இசைக்கும்
மௌன ஊடகம் வழியே
நமக்குள்.