புதன், 20 மே, 2009

MOZHI

* பேசிக்கொண்டிருந்தோம
மௌனங்களால்
உயிரால் பார்த்துக்கொண்டு.
* காதல் பாடல்கள்
ஒலித்துக்கொண்டிருந்தன

நம் மனங்களுக்குள்
* எண்ணிலடங்கா காதல் ஆண்டுகளை
வாழ்ந்துகொண்டிருந்தோம்
கடக்கும் நொடிகளால்.
* உதடு துடித்து
சில வார்த்த்தை தெறித்தன,
நீ தலையசைத்து
போகிறேன் என்றபோது
"எப்போது மீண்டும்?!"- என்று.
கண்களால் "நாளை" என்றாய்,
இதயத்தால் "போய் வா" என்றேன்.
* இரவின் மௌனத்தில்
இன்றிரவு மின்மினி
நம் காதலை இசைக்கும்
மௌன ஊடகம் வழியே
நமக்குள்.



முன்னுரை

நான் எழுதும் ஒவ்வொரு எழுதும்
யார் யார் யோசித்ததோ ?
பலரின் சிந்தனைக்குள் பதிந்து
பிரதி எடுத்துக்கொண்டிருக்கின்றேன் .
இரவின் மடியிலும்
பகலின் கரங்களிலும்

எத்தனையோ மஹா கவிகள்
யோசிப்பவைகளை எழுதுகிறேன்.
இதுவும் இரவலோ
தெரியவில்லை யோசிக்கிறேன்.
பனித்துளி பஞ்சனைகளில்
நினைவுகளை தவழவிட்டு
பணியில் குளிப்பாட்டுகின்றேன்.
ஆனாலும்.,
என் மனம் அடிக்கடி சொல்கின்றது,
நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும்
யார் யார் யோசித்ததோ!


















VANAKKAM

என் இனிய தோழர்களே/ தோழிகளே உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் .
இங்கே நீங்கள் என்னுடைய எண்ணத்தில் உதித்த கவிதைகள் , கட்டுரைகளை காணலாம்.
உங்களின் மேலான கருத்துகளை பதிவு செயுங்கள். என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்

என்றும் உங்களின் தோழன்
ப.அலெக்சாண்டர்

அவர்களும் இருக்கின்றார்கள்


ஆலயமணியோசைக்கு

விழுந்து தொழுபவன் நான்!.

இன்றோ.,

உன் கொலுசின் மணியோசைக்கு

என் இதயம் தொழுகின்றது!

கடவுளும் - காதலும்

கண்ணுக்குத் தெரிவதில்லை.,

இரண்டுக்கும் உருவம் இல்லை.,

இரண்டையும் நம்புவோர்

ஆயிரமாயிரம்!

நான்

பாதயாத்திரை செல்லும்

புனித பாதை

உன் தெரு!

கடவுளும்,

பெற்றோரும் - பிறந்தோரும்

இருந்த மனதில்

இப்போது

"அவர்களும்" இருக்கின்றார்கள்!

நடுப்பகல் ஆனபோதும்

இருண்டு போனதாகவே தோன்றுகிறது

நீ வராத பொழுது!

எல்லோரும் இதைத்தான்

காதல் என்றார்கள்!

அதை மறுதலித்தேன்.,

இதுதான் என் "வாழ்க்கை " என்றேன்!

பணப்பை

ஒண்ணாந்தேதி
பிள்ளைதாச்சி.,
இரண்டாம் தேதி
மலடாச்சி.,

ஏற்றாத கற்பூரம்
காற்றில் கரைய.,
விற்காத பனிக்கட்டியாய்
தீர்ந்துபோகின்றது

என்
பணப்பை!

பணப்பை முழுவதும்
பண வாசம்
பூ பிரிந்த
நார் போல!

தொட்டக்கை
துடித்திருக்க
விட்டுவந்தேன்
வட்டிக்காரனுக்கு!

ஒண்ணாந்தேதி
வேண்டாம் கடவுளே
இல்லேன்னா.,
கடன்காரன்
வேண்டாம் கடவுளே!







மனிதம்

ஒரு போருக்குப்பின்னோ!
ஒரு பேரழிவுக்குப் பின்னோதான்
மனிதம் என்பது
ஆமை போல் எட்டிப்பார்க்கிறது!
மதங்களை கடந்து.....,
இனங்களை கடந்து.....,
தேசங்களை கடந்து....,
மனிதம் எட்டிப்ப்பார்கின்றது!
சந்தோஷப்படும் பொழுதினில்
நெஞ்சிநோரம் வேதனயோடோறு
கேள்வி எழுகின்றது!
மனிதம் என்பது
ஆமை போல் இல்லாமல்.,
உலகம் போர்த்திய
காற்றாய் இருக்கக்கூடாதா?!