வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ஞானி


வேண்டாத பொருள் தேடி
விரும்ம்பி நீ ஓடு!...
உன்னை நாடாத அனைத்திலும்
பற்று நீ கொள்!
பொருளில்லா பொருள் பொருள்பேசி
புதிராய் நீ விளங்கு
புரியாத பொருளெல்லாம் புரிந்ததை
பொய்யாய் நீ புழுகு!
உன்னை ஞானி என
பிரரழைக்க இது போதும்!.

புரிந்துகொள்கிறேன்

உன்னை
மறந்திட வேண்டுமென்று
நினைவுகளால்
உன்னை மறக்காமலும்!..

பிரியவேண்டுமென்று
தொலைவில் சென்றும்
உன்னை பிரியாமலும்!..

விரல்கள்
தடுக்க தடுக்க
உன்னை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கும்
எனக்கு புரிவ்தேஇல்லை
என்னை!.