கனவு காணும்
எல்லோரும் கோபத்தில் இருக்கையில்
சிரிக்கத் தூண்டும்.
ஒரு கவளமும் உண்ணாமல்
வயிறு நிறையும்.
தனந்தநிமையில்
பேசத் தூண்டும்.
கண்ணாடி குவளை பார்த்தும்
தலை வாரச் சொல்லும்.
பொறுப்பை உடைகளை
வெளுக்கச் செய்யும்.
காகிதப்பூவின் நறுமணத்தில்
மனம் லயிக்கும்.
சமத்துவ பூக்கள்
மனதில் மலரும்.
ஆர்ப்பாட்ட உலகம்
அமைதியாய் தெரியும்.
முட்களும் மலராய்
பார்க்கத் தூண்டும்.
காதலின் சாதனை
இது மட்டும் அல்ல.
காத்த நொடிகள்
நெருப்பாய் தகிக்கும்
பார்த்த நொடிகள்
வருடங்களாய் நீளும்
தண்ணீராலோ - கண்நீராலோ
தாகம் தீரும்.
சோம்பல் மறைந்து
சுறு சுறுப்பு எழும்.
காதலால் மானிடர்க்கு
நன்மையும் உண்டாம்
தீமையும் உண்டாம்.
நானும் காதலிக்கிறேன்
உன்னை மட்டும்
காலங்கள் முழுமைக்கும்
என் இறப்பின் வரை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக