வெள்ளி, 22 மே, 2009

அடையாளம்

உன்னை

தோழி ஒருத்தி அறியவென்று

அடையாளம் காட்டி சிலிர்த்தது

என் இதயம்!


நான்

பாராத கணத்தில்

பார்த்த உன் பார்வையை

பார்த்து சொன்னாள்

என்னிடம் என் தோழி!


நீ

போன பின்னும் - நீ

போகவில்லை என சொன்னாள்

என் கண்ணுள் பார்த்து

உயிரை ஆய்ந்த தோழி!





















கருத்துகள் இல்லை: