உன்னை
தோழி ஒருத்தி அறியவென்று
அடையாளம் காட்டி சிலிர்த்தது
என் இதயம்!
நான்
பாராத கணத்தில்
பார்த்த உன் பார்வையை
பார்த்து சொன்னாள்
என்னிடம் என் தோழி!
நீ
போன பின்னும் - நீ
போகவில்லை என சொன்னாள்
என் கண்ணுள் பார்த்து
உயிரை ஆய்ந்த தோழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக