ஆலயமணியோசைக்கு
விழுந்து தொழுபவன் நான்!.
இன்றோ.,
உன் கொலுசின் மணியோசைக்கு
என் இதயம் தொழுகின்றது!
கடவுளும் - காதலும்
கண்ணுக்குத் தெரிவதில்லை.,
இரண்டுக்கும் உருவம் இல்லை.,
இரண்டையும் நம்புவோர்
ஆயிரமாயிரம்!
நான்
பாதயாத்திரை செல்லும்
புனித பாதை
உன் தெரு!
கடவுளும்,
பெற்றோரும் - பிறந்தோரும்
இருந்த மனதில்
இப்போது
"அவர்களும்" இருக்கின்றார்கள்!
நடுப்பகல் ஆனபோதும்
இருண்டு போனதாகவே தோன்றுகிறது
நீ வராத பொழுது!
எல்லோரும் இதைத்தான்
காதல் என்றார்கள்!
அதை மறுதலித்தேன்.,
இதுதான் என் "வாழ்க்கை " என்றேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக