புதன், 20 மே, 2009

அவர்களும் இருக்கின்றார்கள்


ஆலயமணியோசைக்கு

விழுந்து தொழுபவன் நான்!.

இன்றோ.,

உன் கொலுசின் மணியோசைக்கு

என் இதயம் தொழுகின்றது!

கடவுளும் - காதலும்

கண்ணுக்குத் தெரிவதில்லை.,

இரண்டுக்கும் உருவம் இல்லை.,

இரண்டையும் நம்புவோர்

ஆயிரமாயிரம்!

நான்

பாதயாத்திரை செல்லும்

புனித பாதை

உன் தெரு!

கடவுளும்,

பெற்றோரும் - பிறந்தோரும்

இருந்த மனதில்

இப்போது

"அவர்களும்" இருக்கின்றார்கள்!

நடுப்பகல் ஆனபோதும்

இருண்டு போனதாகவே தோன்றுகிறது

நீ வராத பொழுது!

எல்லோரும் இதைத்தான்

காதல் என்றார்கள்!

அதை மறுதலித்தேன்.,

இதுதான் என் "வாழ்க்கை " என்றேன்!

கருத்துகள் இல்லை: