ஒண்ணாந்தேதி
பிள்ளைதாச்சி.,
இரண்டாம் தேதி
மலடாச்சி.,
ஏற்றாத கற்பூரம்
காற்றில் கரைய.,
விற்காத பனிக்கட்டியாய்
தீர்ந்துபோகின்றது
என்
பணப்பை!
பணப்பை முழுவதும்
பண வாசம்
பூ பிரிந்த
நார் போல!
தொட்டக்கை
துடித்திருக்க
விட்டுவந்தேன்
வட்டிக்காரனுக்கு!
ஒண்ணாந்தேதி
வேண்டாம் கடவுளே
இல்லேன்னா.,
கடன்காரன்
வேண்டாம் கடவுளே!
-